வார ராசி பலன்கள் இங்கே.....
திங்கள், 15 டிசம்பர், 2014
இன்று ஸ்ரீ சனீஸ்வர பகவான் இடப்பெயர்ச்சி!! ஒரு விளக்கக் கட்டுரை !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
இன்று ஸ்ரீ சனீஸ்வர பகவான் துலாம் ராசியில்
இருந்து விருச்சிக ராசிக்குள்ளாக அதிகாலை
மணி ௦2.51 க்கு இடம் பெயர்ந்தார். இது பற்றிய
ஒரு சிறப்புக் கட்டுரை இன்றையதினம் இங்கே
நேயர்கள் அனைவருக்கும் வழங்கிடப்படுகிறது.
பொதுவாக,விருச்சிகராசிஎன்பதுசனிபகவானின்
பரம எதிரியான செவ்வாயின் வீடு ஆகும். தவிர
இங்கேதான் சந்திரன் எனப்படும் மனோகாரகன்
நீச்சம் பெறுவதும் இந்த இடத்தில்தான். எனவே
மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய
ராசிக்காரர்கள் துலாம்,விருச்சிகம்,தனுசு ராசி
அன்பர்களே. இவர்கள் தங்கள் ஊரில் உள்ள
கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவக்ரக
சந்நிதியில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு
எள்ளு விளக்கு ஏற்றியும், கருப்பு நிறத்தில்
வஸ்திரம் சாற்றியும், 19 தடவைகள் வலம்
வர, அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும்
விடுபட வாய்ப்புகள் உண்டு. தவிரவும் இவர்கள்
அனைவரும் வாராவாரம் சனிக்கிழமைதோறும்
சனீஸ்வரனை வழிபட நல்லவைகள் தானாகத்
தேடி வரும்.
ஏனைய ராசிக்காரர்களும் இதுபோல நடந்துவர
நன்மைகள்தானே நடக்கும்.
அன்புடன் திருமலை.இரா. பாலு.
செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014
இந்த வார ராசி பலன்கள் ( 20-08-2014 முதல் 27-08-2014 முடிய)
வார ராசி பலன்கள்
(20-08-2014 முதல் 27-08-2014 முடிய)
மேஷம் :- சீற்றமுடன் காணப்படும் மேஷ ராசி
அன்பர்களே !! இந்த வாரம் உங்களது
ராசியாதிபதி செவ்வாய் பத்து, பதினொன்றுக்கு
உடையவரான சனியுடன் இணைந்து ஏழாம்
இடமாகிய மித்ரு வீட்டினில் சஞ்சாரம் செய்வது
நல்லது. மனைவியின்/கணவனின்
உடல்நலத்தில் அதிக கவனம் தேவை.
தன, குடும்பாதிபதி சுக்கிரன் நான்காம் வீட்டில்
தேவ குருவோடு சஞ்சாரம் செய்வது அவ்வளவு
நல்ள்ளதல்ல. பணத்தட்டுப்பாடு இன்னும் 1௦
நாட்களுக்கு நீடிக்கும். புதிய முயற்சிகள்
எதையும் 12 நாட்களுக்கு ஒத்திப்ப்போடுவது
நல்லது. வாகனத்தில் செல்வோர்கள்
கவனத்துடன் செல்ல வேண்டும்.
ரிஷபம் :- அன்பும் பண்பும் உரிய ரிஷப ராசி
அன்பர்களே !! இந்த வாரம் உங்கள் ராசிக்குரிய
அதிபர் சுக்கிரன் மூன்றாம் வீட்டில் வியாழனுடன்
இணைந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல.
மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும்
செயல்படவேண்டிய வாரமிது. தன,குடும்பாதிபதி
இந்த வாரக் கடைசியில் அஸ்தமனம் நீங்கி
அடுத்த ராசிகுள்ளாக பிரவேசிக்க இருப்பதால்
அதுவரை புது முயற்சிகளை ஒத்திபோடுவது
நல்லது. பச்சை நிற ஆடை அணிவது உகந்தது.
சுமாரான வாரமிது.
மிதுனம் :- சாந்த குணமுள்ள மிதுன ராசி
அன்பர்களே !! இந்த வாரம் முழுவதுமேஉங்களது
ராசிக்குரிய புதன் அச்தமனத்துடன் இருப்பதால்
எல்லா வேலைகளையும் மிகுந்த கவனத்துடன்
செயல்பட வேண்டும். மேலதிகாரிகளின்
கோபதாபங்களுக்கு ஆளாக நேரிடும். தனாதிபதி
சந்திரன் வாரத்தின் மூன்று நாட்களுக்கு
உங்களது ராசியில் இருப்பதால் அந்த நாட்கள்
முடியும்வரை கையில் பணப்புழக்கம் அதிகம்
இருக்கும். மனைவி வகையில் வருமானம்
உண்டு. தொழில்ஸ்தானம் சிறப்பாக உள்ளதால்
அதிலும் நிறைய பொருள் வரவை
எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் மன மகிழ்ச்சி
மிகுந்த வாரமிது.
கடகம் :- மெளனமாக இருந்து காரியத்தை
சாதித்திடும் குணமுள்ள கடக ராசி அன்பர்களே
இந்த வாரம் பிற்பகுதி ராசியாதிபதி சந்திரன்
ராசிக்குள்ளாக பிரவேசிக்க இருப்பதால்,
அந்நாட்களில் அனேக தன வரவு உண்டு.
தன,குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் அந்த
இடத்திலேயே இருப்பது மிகவும் நல்லது.
வாரத்தின் கடைசியில் தைரிய,விரைய ஸ்தான
அதிபதி புதன் அஸ்தமனம் நீங்கி
சொஷேத்திரஸ்தானத்தில் நுழைவது மிகவும்
நல்லது. கேட்டது கிடைக்கும். நினைத்தது
நடக்கும். நல்லவைகள் நடக்கும் வாரமிது.
சிம்மம் :- நினைத்ததை நடத்தி முடித்திடும்
ஆற்றல் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே இந்த
வாரம் முழுவதும் மிகவும் நல்ல வாரமாகும்.
தொட்டது அனைத்தும் துலங்கிடும் வாரமிது.தன
கர்ம ஸ்தான அதிபதி புதன் வார்ககடைசியில்
அஸ்தமனம் நீங்கி தனது வீட்டினுள் பிரவேசம்
செய்ய இருப்பதால் அதன்பின்னர் சுப
காரியங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு.
காரியங்கள் எதிலும் கவனமாக செயல்பட
வேண்டிய வாரமிது.
கன்னி :- கண்ணியம் மிகுந்த கன்னி ராசி
அன்பர்களே !! சுப காரியங்கள் வாரத்தின்
கடைசியில் நடைபெற நிறைய வாய்ப்புகள்
உண்டு. தன,பாக்கியஸ்தானாதிபதி சுக்கிரன்
விரையாதிபதியுடன் கூடி இருப்பதால்
தேவையற்ற செலவினங்களை தவிர்த்திட
இயலாது. கவனத்துடன் செயல் பட வேண்டிய
வாரமிது.
துலாம் :- துடிப்புடல் எந்தக் காரியத்தையும்
முடித்திடும் ஆற்றலைப் பெற்ற துலாம் ராசி
அன்பர்களே !! உங்களது ராசியாதிபதி சுக்கிரன்
ஆங்கிலமாதம் செப்டம்பர் மாதம் 1ம்தேதி
லாபஸ்தானத்திர்குள்ளாக பிரவேசிப்பது மிகுந்த
நன்மையை தரும் உங்களுக்கு. அதுவரை சற்று
பொறுமையாக எந்த ஒரு விஷயத்தையும்
அணுகிட வேண்டும். நினைத்தது நிறைவேறும்
வாரமிது.
விருச்சிகம்:- எந்தஒரு காரியத்தையும்விரைந்து
முடித்திடும் ஆற்றல் பெற்ற விருச்சிக ராசி
அன்பர்களே. இந்த வாரம் உங்களது ராசியாதிபதி
செவ்வாய் தனது எதிரி சனியோடு கூடி விரிய
ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால்
சோதனைகள் மிகுந்த வாரமிது. எதிலும்
கவனத்துடன் செயல்படவேண்டிய வாரமிது.
தனுசு :- தெளிவாக முடிவெடுக்கும் தனுசு ராசி
அதிபதிகளே. ராசிக்குரிய வியாழன் ராசிக்கு
எட்டில் மறைவது அவ்வளவு நல்லதல்ல.
ஆனாலும் உச்ச பலத்துடன் உங்களது
தன,குடும்ப ஸ்தானத்தை உற்று நோக்குவது
பெரும்பாலும் நன்மையான பலன்களையே
தரும். பஞ்சம,விரயாதிபதி செவ்வாய் 1-௦9-2௦14
முதல் தனது வீட்டினில் பிரவேசிப்பதால்
கவனத்துடன் பொருளாதரத்தை கையாள
வேண்டும். இல்லையேல் செலவுதான்.
எச்சரிக்கையோடு செயல்படவேண்டிய வாரமிது.
மகரம் :- சாந்தகுணமும் பொறுமையோடு
எதையும் சாதிக்கும் மனமும் கொண்ட மகர ராசி
நேயர்களே !! இந்த வாரம் உங்களது ராசியாதிபதி
சனி உச்சம் பெற்று காரியஸ்தானத்தில்
இருப்பதால் நீங்கள் தொழில் ரீதியாக
நிறையவே சம்பாதிப்பீர்கள். 3, 12ம்
இடத்திற்குரிய வியாழன் ஏழில் சஞ்சரிப்பதால்
கணவன்/மனைவி மூலமாக பொருள் வரவும்
உண்டு. செலவும் உண்டு. வாரத்தின் கடைசியில்
செவ்வாய் விலகுவது உங்களுக்கு பெருத்த
லாபத்தை ஈட்டித்தரும். மொத்தத்தில் லாபம்
மிகுந்த வாரமிது.
கும்பம் :-
உன்னதமானஎண்ணங்களைக்கொண்ட கும்ப
ராசி நேயர்களே !! வாரம் முழுவதும் மகிழ்ச்சியும்
சந்தோஷமும் நிறைந்த வாரமிது.
வாரக்கடைசியில் புதன் சொந்த வீட்டிற்குச்
செல்வது மிகவும் நல்லது. மனம் பூரிப்படையும்
நேரமிது. எதையும் நிதானமாக யோசித்துசெயல்
பட்டால் வெற்றி நிச்சயம். கணவன்/மனைவி
உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டிய
வாரம். மொத்தத்தில் அதிர்ஷ்டகரமான வாரம்
இது.
மீனம் :- கடும் உழைப்பையே நம்பி செயல்படும்
மீனா ராசி நேயர்களே !! ராசியாதிபதி குருவின்
உச்சம் பெற்ற 9ம் பார்வை உங்களது ராசிக்கு
கிடைப்பதாலும், 9ம் வீட்டை குரு உச்சம் பெற்று
5 ம் பார்வையாக பார்ப்பதாலும் எங்கும் வெற்றி
எதிலும் வெற்றி. செப்டம்பர் மாதம் ௧ம் தேதி
முதல் ஒளிமயமான எதிர்காலம்தான் உங்கள்
வாழ்க்கையில். பொறுமையுடன்செயல்படுங்கள்
வெற்றி நிச்சயம். இது வேத தத்துவம்.
மொத்தத்தில் மிகவும் உத்வேகமாக செயல்பட
உதவி செய்திடும் வாரமிது.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014
வார ராசி பலன்கள் இங்கே....(13-08-2014 முதல் 19-08-2014 முடிய)
வார ராசி பலன்கள்.
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
வணக்கம். ராசி பலன்கள் என்றால் அது
எப்படி சொல்லப்படுகின்றது என்பது
இங்கே உங்களில் மிகப்பெரும்பான்மை
மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை
என்னும் காரணத்தினால் அது உங்களுக்கு
இங்கே விரிவாக விளக்கிக் கூறப்படுகிறது.
தாயின் கருவறையில் இருந்து குழந்தை
வெளியே இந்த பூமிக்கு வருகின்றபோது,
(இயற்கையான பிரசவங்களுக்கு மட்டுமே
ராசி பலன்கள் பொருந்தும்--நாள் பார்த்து,
நட்சத்திரம் பார்த்து, நேரம் பார்த்து அறுவை
சிகிச்சை மூலமாக வெளிவருகின்ற (SCICERIAN)
குழந்தைகளுக்கு ஜாதகம் என்பது
கிடையாது என்பதனை மிக்க வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறேன் அன்புஉள்ளங்களே!!)
வான்வெளியில் சந்திரன் எந்தநட்சத்திரத்தின்
பாதத்தில் இருக்கிறதோ அதுதான் அந்த பிறந்த
குழந்தையின் ராசிஆகும்.மொத்தநட்சத்திரங்கள்
27 ஆகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு
பாதங்கள் ( Parts) உண்டு. 27 நட்சத்திரங்களுக்கும்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள்
வீதம்மொத்தம் 108 பாதங்கள் ஆகும். இதை 12
ராசிக்கட்டங்களால்வகுத்தால் ஒவ்வொரு ராசி
கட்டத்திற்குள்ளும் 9 பாதங்கள் கொள்ளளவு
ஆகும். அந்த வகையில் நாம் பார்த்தால் :-
1)மேஷம் :- அசுபதி(4 )பரணி(4 )கார்த்திகை(1)......=9.
2)ரிஷபம் :- கார்த்திகை (3)ரோகினி(4)மிருகீரிஷம் (2)........ = 9.
3) மிதுனம் :- மிருகசீரிஷம்(2)திருவாதிரை(4) புனர்பூசம்(3).= 9.
4)கடகம்:-புனர்பூசம்(1)பூசம்(4)ஆயில்யம்(4).......= 9.
5) சிம்மம் :- மகம்(4)பூரம்(4)உத்திரம்(1).................= 9.
6) கன்னி :- உத்திரம் (3)ஹஸ்தம்(4)சித்திரை(2)....= 9.
7) துலாம் :-சித்திரை(2)சுவாதி(4)விசாகம்(3).....= 9.
8)விருச்சிகம்:விசாகம்(1)அனுஷம்(4)கேட்டை(4)= 9
9)தனுசு :-மூலம்(4)பூராடம்(4)உத்திராடம்(1).......= 9.
10)மகரம்:-உத்திராடம்(3)திருவோணம்(4)
அவிட்டம்(2)=9.
11)கும்பம்:-அவிட்டம்(2)சதயம்(4)பூரட்டாதி(3).= 9.
12)மீனம்:-பூரட்டாதி(1)உத்திரட்டாதி(4)ரேவதி(4)= 9.
மொத்தம் .........= 108.
" வார ராசி பலன்கள் "
மேஷம் :- குடும்பத்தில் விருந்து, விசேஷம்,
சந்தோஷம் உண்டு.முதலீடு செய்திட உகந்த
வாரம் இது. லாபம் கிட்டும் மனம் மகிழ்ச்சியுடன்
இருக்கும் வாரம் இது.
ரிஷபம் :- அக்கறை,ஆர்வத்துடன் செயல்
பட்டால் வெற்றி நிச்சயம் உண்டு.வெளிநாட்டு
வணிகம், ஏற்றுமதி தொழில்களில் எதிர்பார்த்த
லாபம் உண்டு.
மிதுனம் :- எதிர்பார்த்த எல்லா இனங்களின்
முடிவுகளும் தள்ளிப்போகலாம். கடும்
முயற்சியுடன் போராடும் உங்கள்
முயற்சிகளுக்கு வெற்றி நிச்சயம்.விமர்சனங்கள்
உங்களை நோக்கி பாய்வதால்,
சோர்வடையாமல், முன்னேறமுயற்சி எடுத்தால்
வெற்றி உண்டு.
கடகம் :- தடை,தாமதங்கள் நீங்கிடும் வாரம்இது.
வெளியூர் பயணங்களில்அனுகூலம்காணப்படும்.
குடும்பச்சூழல் உங்களை கோபம் அடையச்
செய்யலாம். செவ்வாய்,சனி கிரக சேர்க்கை
உங்களது ராசிக்கு நான்கில் உள்ளதால்,
ராசியை ஏழு,எட்டுக்கு உடைய சனிபார்பதாலும்,
நீங்கள் எவ்வளவுதான் நல்லது செய்தாலும்,
யாரும் அதை உணர மாட்டார்கள்.
சிம்மம் :- காரியத் தடை இந்த வாரம் இல்லவே
இல்லை.2ம் இடத்து இராகுவினால், எந்த ஒரு
பிரச்சினையிலும் திடமான ஒரு முடிவுக்கு வர
இயலாது.வாகன விபத்து ஏற்பட வாய்ப்புகள்
உள்ளதால் கவனமாக வாகனம்
செலுத்த வேண்டிய வாரம் இது. பொருளாதாரம்
சரளமாக இருக்கும்.
கன்னி :- ராகுவும் கேதுவும் ஒரு கௌரவ
போராட்டத்திற்கு வழி வகுக்கும். ரத்த
சம்பந்தமான,நரம்பு சம்பந்தமான நோய்
ஆட்கொள்ள அதிக வாய்ப்பு உண்டு. அறுவை
சிகிச்சை கூட ஏற்படலாம். கவனமுடன்
இருக்கவேண்டிய வாரமிது.
கூட்டு வியாபாரத்தைத் தவிர்த்தால் நலம்உண்டு.
துலாம் :- கோச்சார ரீதியாக நடப்பு வாரத்தில்
கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. ஜென்ம
ராசியில் உள்ள செவ்வாய்,சனி குடும்பத்தில்
தேவையில்லாத பல்வேறு பிரச்சினைகளை
உருவாக்கலாம். கவனத்துடன் பேசுங்கள்.
ஏழரைச்சனியின் கொடுமை இன்னும் மீள
முடியவில்லை. 1௦ள் உள்ள குரு உச்சம் பெற்று
உங்களது தனஸ்தானமாகிய விருட்சிகத்தை
தனது 5ம் பார்வையாக பார்ப்பதால், வெற்றி
நிச்சயம்.. இது வேத தத்துவம். நம்பினால் ஜெயம்
நிச்சயம்.
விருச்சிகம் :- இடம் பெயரும் யோகம் சிலருக்கு
உண்டாகலாம்.சிலர் மேலதிகாரிகளின்
வெறுப்புக்கு ஆளாகிடும் வாய்ப்பு அதிகம்
காணப்படுவதால்பொறுப்புடன்பணியாற்றினால்
நிம்மதி கிட்டும். உச்சம் பெற்ற தன,பஞ்சம
ஸ்தானாதிபதியான வியாழன் உச்சம் பெற்று
தனது 5 ம் பார்வையாக உங்களது ராசியைப்
பார்ப்பதால் எப்படியாவது காலத்தை சமாளித்து
வாழ்ந்திடவேண்டிய வாரம் இது. கவனம்.உஷார்.
தனுசு :- நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும்
வாரமிது. ராசிநாதன் எட்டில் மறைந்தாலும்
பத்தாமிடத்திற்கு உரிய புதன் 9 ல்நிற்பது
ஓரளவிற்கு ஆறுதல் தரும். பாக்கியாதிபதி
சூரியன்எட்டில்மறைவதால்,ஏதோஒருவகையில்
நல்லது நடக்க வாய்ப்பு ஏற்படும். லாபாதிபதி
எட்டில் மறைவது நல்லதல்ல.லாபம் சற்று
தாமதமாக வரலாம். இடமாற்றம், வாகன
யோகம்,இதுபோன்ற கனவுகள் நிறைவேறும்
காலம் இது. கடவுளை நம்பினோர்
கைவிடப்படார்.
மகரம் :நீங்கள்இதுவரையில்பட்டகஷ்டத்திற்கும்
உழைத்த உழைப்பிற்கும் பலன் அற்பமாக
இருந்தது இனிமேல் போகப்போக சூரியன்
கிழக்கில் உதித்து ஒளிக்கற்றை வெளிவருவது
போல கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்
காலம் இது. உங்களை இதுகாலம்வரையிலும்
வாட்டிவதைத்தரொணம்,ரோகம்,கடன்,சத்துரு,
நோய்,வைத்தியச் செலவுகள், இவைகள்
படிப்படியாக குறைந்து அறவே நீங்கிடும்
வாரமிது. கடவுள் பக்தி மிக மிக அவசியம்.
கும்பம் :- அனைத்து பிரச்சினைகளுக்கும்
நல்லதீர்வு கிடைக்கும் வாரம் இது. சுயமாகவும்,
சுதந்திரமாகவும், தைரியமாகவும் நீங்கள்
செயல்பட ஆரம்பிக்கும் காலமிது. ராசிக்குரிய
சனிபகவான் இனிமேல் உங்களுக்கு இனிமை
செய்திட ஆரம்பிக்கும் வாரம் இது.
யாரையும் எதற்கும் நம்ன்பாதீர்கள். காலமும்,
கிரகங்களும் உங்களுக்கு அநோகூலமான
பாதையை உங்களுக்கு காட்டப் போகின்ற மிக
அருமையான வாரமிது.
மீனம்:-இந்தவாரம் மிகவும்முன்னேற்றமானதாக
அமையும்.ராசிக்குரிய குரு ஒன்பதாம்
பார்வையாக உங்களது ராசியைப் பார்க்கும்
இந்தக் காலகட்டத்தில், உங்களுக்கு கேட்டது
கிடைக்கும்.நினைத்தது நடக்கும். கனவுகள்
நனவாகும். குழந்தைகளின் படிப்பு, சுப
காரியங்கள்,உத்தியோகம்,சம்பளஉயர்வுபோன்ற
அனைத்து இனங்களிலும் நீங்கள் எதிர்பார்த்த
பலன்கள் கிடைக்கப் போகும் வாரம் இது.
வியாழக்கிழமை தவறாமல் நவக்கிரகத்தில்
உள்ள குருவிற்கு மொச்சைக்கடலை மாலை
போட்டு வெள்ளைப்பூஅணிவித்து நெய் விளக்கு
ஏற்றி 16முறை சுற்றி வந்தால் நினைத்தது
நிறைவேறும். கடவுள் நம்பிக்கை வேண்டும்.
நண்பர்களே !!
நடப்பது எல்லாம் விதிப்பயன்தான். அதனை
அனுபவித்திடவே இந்த ஜென்மம். உணர்ந்து
நாலுபேருக்கு நம்மால் முடிந்த உதவிகள்
செய்து வந்தால் அடுத்த ஜென்மமாவது நல்ல
படியாக அமையும்.
இதனையே இந்தவார உறுதியாக ஏற்று செயல்
பட்டால் என்றும் நன்மை உண்டு.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். ஜோதிட சிரோன்மணி
மதுரை ஸ்ரீலஸ்ரீ பாலு சாஸ்திரிகள்.
திங்கள், 11 ஆகஸ்ட், 2014
வார ராசி பலன்கள் இங்கே.......
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இனிய காலை
வணக்கங்கள்.
உங்கள் அனைவருக்கும் இந்தக்
காலைவேளையில் ஒரு மகிழ்ச்சி
நிறைந்த செய்தி என்னவென்றால்,
நாளை முதல் ஒவ்வொரு வாரமும்
உங்களது ராசிக்குரிய பலன்கள்
என்னென்று, அடியேன் எழுதிட
முடிவு செய்துள்ளேன் என்பதுதான்
அந்த இனித்திடும் செய்தி.
" சாமிதான் பொய் என்றால்
சாணத்தில் பார் !! "
" சாஸ்திரம்தான் பொய் என்றால்
வானத்தில் பார் !! "
இது ஆன்றோர்களும் அறிவில்
சிறந்த சான்றோர்களும்
நமக்கு அருளிச் சென்ற
பொன்மொழியாகும்.
இதன்படி, உங்கள் ஒவ்வொருவரது
ராசிபலன்களும், உங்களுக்கு
ஜோதிடசிரோன்மணிஸ்ரீலஸ்ரீமதுரை
T.R.பாலு சாஸ்திரிகள் அவர்கள்
(அடியேன்தான்) மிகத் துல்லிதமாக,
டிகிரி சுத்தமாக ஒவ்வொரு
ராசியையும் ஆராய்ந்து, ஆராய்ச்சி
செய்து வழங்கிடக்காத்துக்கொண்டு
இருக்கிறார்கள்.
என்றில் இருந்து என்று கேட்டால்,
நாளை புதன்கிழமை 13-௦7-14
முதல். தவறாமல் படித்துபார்த்து
பலன்பெறஅன்புடன் வேண்டுகிறேன்
எல்லாமே விதிப்படித்தான் நடக்கும்.
இதில் எள்ளின் முனையளவுகூட
அடியேனுக்கு சந்தேகம் என்பது
இல்லவே இல்லை.
ஓம் நமச்சிவாய !!
நாதன் தாழ் வாழ்க !!
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாழ் வாழ்க !!
ஓம் நமச்சிவாய !!
அன்பன் ஜோதிடர்
மதுரை T.R. பாலு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)